search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழாய் உடைப்பு"

    இன்று காலை முதல் இந்த பகுதிக்கு சரியான முறையில் குடிநீர் வராமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்‌.

    கடலூர்:

    கடலூர் கேப்பர் மலை மற்றும் திருவந்திபுரம் மலைப்பகுதியில் இருந்து ராட்சத குழாய் மூலம் கடலூர் மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வரவழைக்கப்பட்டு, அந்தந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் சேமித்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய ப்பட்டு வருகின்றது. கடலூர் செம்மண்டலம் தீபன்நகர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து தினந்தோறும் கடலூர் செம்மண்டலம், மஞ்சக்குப்பம் ஒரு பகுதி, வில்வ நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை செம்மண்டலம் நான்கு முனை சந்திப்பில் சாலைக்கு அடியில் இருந்த குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் முழுவதும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த குடிநீரானது சாலையில் தற்போது குளம் போல் தேங்கி வீணாகி வருகின்றன.

    மேலும் இன்று காலை முதல் இந்த பகுதிக்கு சரியான முறையில் குடிநீர் வராமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இது மட்டும் இன்றி ஒரு சில இடங்களில் சென்ற குடிநீர் முழுவதும் கலங்கலாகவும் வந்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய் சீர் செய்யும் நடவடிக்கையாக முதற்கட்டமாக நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை என்பதால் அவர்களிடம் அனுமதி கேட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் அனுமதி அளித்த பின்பு பள்ளம் தோண்டப்பட்டு குடிநீர் செல்லும் குழாய் சீரமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அலுவலர் ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையில் மக்களுக்கு மிக அத்தியாவசியமான தேவையான குடிநீரை எந்தவித பாதிப்புகளும் இன்றி உடனடியாக வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து பைப்புகள் அமைக்கப்பட்டு செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிக்கும் நிலையத்திற்கு செல்கிறது.
    • அதிகாரிகளுக்கு தெரிவித்தும் குழாய் உடைப்பு சரிசெய்யப்படாமல் தண்ணீர் வீணாக தொடர்ந்து செல்கிறது.

    பூந்தமல்லி:

    சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் உள்ள மழை நீர் அவ்வப்போது சென்னை மக்களின் தாகம் தீர்க்க சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து பைப்புகள் அமைக்கப்பட்டு செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிக்கும் நிலையத்திற்கு செல்கிறது. இந்த நிலையில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலை கொல்லசேரி அருகே கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுத்து செல்லப்படும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து தண்ணீர் வெளியில் பீய்ச்சி அடித்து அருவி போல் மேல் நோக்கி பாய்ந்து கொட்டுகிறது. இதனால் தண்ணீர் வீணாக ஆறாக தரையில் ஓடுகிறது.

    இதுபற்றி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் குழாய் உடைப்பு சரிசெய்யப்படாமல் தண்ணீர் வீணாக தொடர்ந்து செல்கிறது. எனவே பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் உடைந்த குழாயை உடனடியாக சரிசெய்து தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • இணைப்பு குழாய் உடைந்து வயல்களுக்குள் ஓடி குடிநீர் வீணாகிறது.
    • எந்தவித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் இரும்பாடி வைகை ஆற்றுப் பகுதியில் இருந்து மன்னாடி மங்கலம்-காடுபட்டி வழியாக திருமங்கலம் நகராட்சிக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. காடு பட்டி பகுதியில் இந்த குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.

    தற்போது தென்கரை கண்மாய் செல்லும் வழியில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வயல்களுக்குள் சென்று வீணாகி வருகிறது. குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் குடிநீர் வீணாக வயல்களுக்குள் புகுவதால் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளி யேறி வீணாகி வருகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால் தமிழ்நாடு அரசு குடிநீர் வடிகால் வாரியம், மதுரை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து இரும்பாடி முதல் திருமங்கலம் வரை குழாய்களின் இணைப்பை உறுதி செய்ய வேண்டும்.

    ஆங்காங்கே ஏற்பட்டுள்ள சிறிய உடைப்புகளை சரி செய்து மீண்டும் உடைப்பு ஏற்படா மல் இருக்கவும், குடிநீர் வீணாக வெளியேறாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • தாசம்பாளையம் பிரிவு அருகே குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் ரோட்டில் ஆறு போல ஓடுகிறது.

    அவினாசி :

    அவினாசி அருகே அன்னூர், கருவலூர், அவினாசி, திருமுருகன் பூண்டி, அனுப்பர்பாளையம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து 4 வது கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவினாசி, மேட்டுப்பாளையம் ரோட்டில் தாசம்பாளையம் பிரிவு அருகே குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் ரோட்டில் ஆறு போல ஓடுகிறது. இதனால் சாலையில் செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    குடிநீருக்காக மக்கள் அவதி பட்டு வரும் நிலையில் இப்படி குடிநீர் வீணாவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உடனே வடிகால் வாரியத்தனர் உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • இரும்பு குழாய் உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது.
    • கடலில் கச்சா எண்ணெய் கலந்த சம்பவம் மீனவ கிராம பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூரில் சி.பி.சி.எல். எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான 3 இரும்பு குழாய்கள் கடலோர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்றிரவு திடீரென ஒரு குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது.

    இந்த உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது.

    இதனால் நாகூர், பட்டினச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள மீனவ கிராம மக்களுக்கு சுவாச கோளாறு, கண் எரிச்சல் ஏற்படுவதுடன், மீன்கள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

    இதனைத் தொடர்ந்து கூடுதல் கலெக்டர் பிரித்விராஜ், சி.பி.சி.எல். அதிகாரிகள், மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், தாசில்தார் ஆகியோர் எண்ணெய் மிதந்து வரும் கடற்கரை பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர். மேலும் அந்த கிராம மக்களுடன் சி.பி.சி.எல். அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து டோனியர் விமானம் மூலமாக குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை இந்திய கடலோர காவல் படையினர் பார்வையிட்டு வருகின்றனர்.

    கடலில் கச்சா எண்ணெய் பரவி உள்ளதை நீக்குவதற்கான வழிமுறைகளான ஸ்பில் டிஸ்பரசன் பவுடர் மூலமாகவோ அல்லது குழாய் மூலம் எண்ணெயை நீக்குவதா அல்லது கடல் நீரை படிய வைத்து அதனை அகற்றுவதா என்பது குறித்தும் இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல் மற்றும் டோனியர் விமானம் மூலம் ஆய்வு செய்தனர். மேலும் எவ்வளவு தூரம் எண்ணெய் பரவி உள்ளது என கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் கடலில் எண்ணெய் பரவாமல் இருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்டினச்சேரி மீனவர்கள் கச்சா எண்ணெயை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கடலில் கச்சா எண்ணெய் கலந்த சம்பவம் மீனவ கிராம பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • போக்குவரத்து இடையூறு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
    • குடிநீா் குழாய் பதிக்கும்போது ஏற்பட்ட குழாய் உடைப்பை சரிசெய்வதுடன், தோண்டப்பட்ட குழிகளையும் மூட வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட பகுதியில் குடிநீா் குழாய் பதிக்கும்போது ஏற்பட்ட குழாய் உடைப்பை சரி செய்யக்கோரி பா.ஜ,.க. சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

    திருப்பூா் மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாரிடம், ராயபுரம் மண்டல் பா.ஜ.க. தலைவா் பூபதி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட 27 -வது வாா்டு சுப்புராயா் கவுண்டா் சாலையில் கணேசபுரம் 4 -வது வீதியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள் கடந்த 20 நாள்களுக்கு முன்பாக முடிவடைந்தன. இந்தப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் தற்போது வரையில் மூடப்படவில்லை. மேலும், குழாய்கள் முறையாக ஒட்டப்படாததால் தண்ணீா் கசிந்து சாலைகளில் வழிந்தோடுவதால் சேரும், சகதியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

    ஆகவே குடிநீா் குழாய் பதிக்கும்போது ஏற்பட்ட குழாய் உடைப்பை சரிசெய்வதுடன், தோண்டப்பட்ட குழிகளையும் மூட வேண்டும். அதே போல ராஜீவ் காந்தி நகா் 5 -வது வீதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்டுள்ள குழிகளையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 'எல் அண்ட் டி' திட்ட தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
    • அடிக்கடி பழுது பார்ப்பதும், மீண்டும் உடைப்பு ஏற்படுவதும் சகஜமாகி வருகிறது.

    பல்லடம் :

    பல்லடம் ராயர்பாளையத்தில் பஸ் நிறுத்தம் அருகே, பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டின் வழியாக செல்லும் 'எல் அண்ட் டி' திட்ட தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதிலிருந்து ஏராளமான தண்ணீர் ரோட்டில் வழிந்தோடி வீணாகி வருகிறது. இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:- திருப்பூர் ரோட்டில், பனப்பாளையம் முதல் மகாலட்சுமி நகர் வரை, ஏராளமான இடங்களில் 'எல் அண்ட் டி' குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி பழுது பார்ப்பதும், மீண்டும் உடைப்பு ஏற்படுவதும் சகஜமாகி வருகிறது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன், குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பள்ளம் உருவாகி, வாகன ஓட்டிகள் பலர் விபத்துக்குள்ளாகினர். அதுபோல், ராயர்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே நேற்று முதல் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது.

    இதே பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யப்பட்டது. தற்போது, அதேஇடத்தில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தண்ணீர் வீணாவது ஒருபுறம் இருக்க, ரோடு சேதமடைவதுடன், வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×